உள்நாட்டு செய்திகள்புதியவை

ஹெரோயினுடன் பதுளையில் ஒருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் பதுளை ஹாலிஎல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பிரதேச போதைப்பொருள் பிரிவு நடத்திய விசேட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 15 கிராம் 190 மி.கி ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

25 வயதான சந்தேக நபர் அம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க