உள்நாட்டு செய்திகள்புதியவை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்தியர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கைதானவர்கள் இராமேஸ்வரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த என அதிகாரிகள் தெரிவித்தார்.

தீவகம், நெடுந்தீவு பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் குறித்த மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த நால்வரையும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க