விளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்நெருக்கடியை சந்தித்துள்ளது.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 36-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் நாணயசுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரமத் ஷா மற்றும் குல்படின் நைப் களமிறங்கினர்.

இதில் குல்படின் நைப் 15 ஓட்டங்களில் விக்கட் இழக்க, அடுத்த பந்திலேயே ஹஸ்மத்துல்லா ‌ஷகிடி டக் அவுட்டாகி நடையை கட்டினார்.

அடுத்து ஜோடி சேர்ந்த இக்ரம் அலி மற்றும் அஸ்ஹார்  அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

எனினும் அடுத்தடுத்த விக்கட் இழப்புகளால் ஆப்கானிஸ்தான் நெருக்கடியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 31 ஓவர் முடிவில் 5 விக்கட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க