உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

இரணைதீவு கடல் பரப்பில் 4000 கிலோ எடை கொண்ட மீன் சிக்கியது

கிளிநொச்சி இரணைதீவு கடல் பரப்பில் மீனவரின் வலையில் மிகப்பெரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது.

இரணைமாதா நகரில் வசித்துவரும் மனோகரசீலன் என்பவர் நேற்றிரவு விரித்த வலையில் குறித்த மீன் சிக்கியுள்ளது.

வலையில் சிக்கிய குறித்த மீன் ஏறத்தால 4000 கிலோ எடை கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கடல் பரப்பில் இவ்வாறு பெரிய மீன் பிடிபட்டமை இதுவே முதல் தடவை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாச்சிக்குடா பகுதியிலிருந்து மீன்பிடிக்காக சென்று இரவு வலை விரித்த குறித்த மீனவர், இன்று காலை தொழிலிற்கு சென்றிருந்த வேளை அவரது வலையில் சிக்கியிருந்ததாக அவர் தெரிவிக்கின்றார்.

சிறு கடல்பரப்பான குறித்த பகுதியில் இவ்வாறு இவ்வாறு பெரிய மீன் பிடிபட்டமை தொடர்பில் மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

குறித்த மீன் தொடர்பில் நீரியல் வள திணைக்களம் ஆய்வு செய்ததன் பின்னரே மேற்கொண்டு என்ன செய்ய முடியும் என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என முழங்காவில் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க