உள்நாட்டு செய்திகள்புதியவை

தயாசிறி ஜெயசேகரவுக்கு மீண்டும் அழைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவை முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நாடாளுமன்ற விஷேட தெரிவுக் குழு, எதிர்வரும் 10ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுசெயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவை அன்றைய தினம் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாசிறி ஜெயசேகர நேற்று வெள்ளிக்கிழமை குறித்த குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தம் அவர் முன்னிலையாகாத நிலையில், மீண்டும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க