சினிமா

‘இன்று நேற்று நாளை’ 2 ஆம் பாகம் உருவாகிறது

விஷ்ணு விஷால் நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இன்று நேற்று நாளை’.

இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வரும் செம்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார், தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

ஆர்யா, விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் நடிப்பில் ரவிகுமார் இயக்கிய ‘இன்று நேற்று நாளை’, ‘ஸ்டூடியோ க்ரீன்’ ஞானவேல் ராஜா மற்றும் சி.வி.குமார் இணை தயாரிப்பில் வெளியானது.

கருத்து தெரிவிக்க