உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

எமது தலைமுறையின் இருப்புக்காகவே போராடுகின்றோம்: வியாழேந்திரன்

தாங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் அடுத்த தலைமுறையின் இருப்புக்குரிய போராட்டங்களாகத்தான் இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கு தமிழர்களின் இருப்பை வலியுறுத்தி  யாத்திரிகளை வழியனுப்பும்  நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எங்களை விமர்சிக்கின்றவர்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் யாவும் உங்களுக்காகவும் உங்களின் அடுத்த தலைமுறைக்காகவும் என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது எனவும் அவர் கூறினார்.

யார் யாரெல்லாம் நீதி நியாயத்தை தட்டிக்கேட்கின்றார்களோ அவர்களெல்லாம் இனவாதிகளாகவும்  துரோகிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள் எனவும் அவர் கவலை வெளியிட்டார்.

தமிழர்களது போராட்டங்களை விமர்சிக்கும் தமிழ் விசமிகளை அவர்கள் தமிழர்களா என பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் வியாழேந்திரன் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க