உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பிரதமர் நாடாளுமன்றுக்கு வராமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: எதிர்க்கட்சி

அவசரக்கால நிலை நீடிப்பு தொடர்பான விவாதம் நேற்று முன்தினம் நாடாளுமன்றில் இடம்பெற்றபோது பிரதமர் உட்பட்ட பல ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்கள் சமுகமளிக்கவில்லை.

இது அவசரகால நிலையின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள பல சந்தேகநபர்களை விடுவிக்கும் ஒரு சூழ்ச்சியாக இருக்கலாம் என்று கூட்டு எதிர்க்கட்சி சந்தேகம் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் முக்கியமான விவாதம் நடைபெறும் போது இவர்கள் சமுகமளிக்காமை சந்தேகத்துக்குரியதே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க