உள்நாட்டு செய்திகள்புதியவை

‘தெரிவுக்குழுவில் முன்னிலையாக தயாசிறி மீண்டும் அழைக்கப்படுவார்’

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்க தவறிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவிற்கு மீண்டும் அழைப்பாணை விடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவில் இன்று முன்னிலையாகுமாறு தயாசிறி ஜெயசேகரவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் தான் ஆஜராகப் போவதில்லை என அவர் தெரிவித்திருந்தார், இந்நிலையில் மீண்டும் மற்றுமொரு நாளில் தெரிவுக்குழுவின் முன் ஆஜராக அழைக்கப்படுவார் என குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறன்று தாஜ் ஹோட்டலில் பயங்கரவாதி ஒருவர் தாக்குதல் நடத்தாமல் வெளியேறியமை குறித்து மேலதிக தகவல்களை வெளியிடவுள்ளதாக தயாசிறி ஜெயசேகர ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க