வெளிநாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆவேச தாக்குதல் 8 பொலிஸார் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் டைகுன்டி மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் 8 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

இந்த பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் பொலிஸார் ஆகியோரை கொண்ட பயங்கரவாத ஒழிப்பு கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், நாட்டின் மத்திய பகுதியில் உள்ள டைகுன்டி மாகாணத்தில் சோதனைச் சாவடிகளை குறிவைத்து இன்று தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 8 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.

தலிபான்கள் தரப்பில் பலர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க