உள்நாட்டு செய்திகள்புதியவை

7 ரயில்கள் இன்று சேவையில் உள்ளன:ரயில்வே துறை அதிகாரி

ரயில்வே தொழிற்சங்கங்கள் 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஏழு ரயில்கள் இன்று இயக்கப்படுவதாக ரயில்வே துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பு-கோட்டை கரையோரப் பகுதிகளுக்கான இரண்டு அலுவலக ரயில்கள் இன்று இயக்கப்படுவதாக குறித்த அதிகாரி குறிப்பிட்டார்.

ரயில்வே சேவைகளை அத்தியாவசிய சேவையாக அறிவித்து நேற்று வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனினும் ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நடவடிக்கையைத் தொடர்ந்துள்ளன.

இது சட்டத்துக்கு முரணான செயற்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதனை எதிர்த்து ரயில்வே திணைக்களம் முறைப்பாடு மேற்கொண்டுள்ளது.

ஊழியர்களின் சம்பளம் உட்பட ரயில்வே துறையில் தீர்க்கப்படாத சில பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க