உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

வவுனியாவில் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு அதிகாரியால் தாக்கப்பட்டதை கண்டித்து அவ் அலுவலக உத்தியோகத்தர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கணக்காய்வு கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் இடம்பெற்ற அசம்பாவிதம் ஒன்றில் எமது விவசாய பணிப்பாளர் தாக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே இதற்கு நீதி பெற்றுத்தரவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த வவுனியா மாவட்ட செயலகத்திற்கு சென்று அரசாங்க அதிபரிடம் குறித்த சம்பவத்திற்கு நீதி கோரி நடவடிக்கை எடுக்குமாரு மகஜரொன்றினை கையளித்துள்ளனர்.

 

கருத்து தெரிவிக்க