உள்நாட்டு செய்திகள்புதியவை

மஹிந்த ராஜபக்‌ஷ மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவர்: ராஜித சேனாரட்ன

மஹிந்த ராஜபக்‌ஷ மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத இனவாத அடிப்படையில் செயற்பட்டு வருவதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன குற்றம்சாட்டியுள்ளார்.

யுத்தம் முடிந்த பின்னர் நெல்சன் மண்டேலாவைப் போல செயற்பட்டால் நோபள் சமாதான விருதை பெற்றுக்கொள்ள முடியும் என தாம் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த போதிலும் மஹிந்த ராஜபக்ஷ ரொபர்ட் முகாபே போன்று தொடர்ச்சியாக செயற்பட்டு வந்ததாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ இன்னமும் ஓர் இனவாத அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றார் எனவும் ராஜித சேனாரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க