வெளிநாட்டு செய்திகள்

மும்பையில் அடை மழை: போக்குவரத்து கடுமையாக பாதிப்பு

மும்பையில் இன்று காலை முதல் பெய்து வரும் அடை மழையால்  நகரின் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மும்பையின் குர்லா உள்ளிட்ட பகுதிகளிலும், தானே உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதோடு பாடசாலை, கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறெனினும் மின்சார ரயில் மற்றும் விமான சேவை வழக்கம் போல் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் அடைமழை தொடர வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வு நிறுவனமான ஸ்கைமேட் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க