உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

மன்னார் கீரி கடற்கரை பகுதியில் 140 கிலோ பீடி சுற்றும் இலைகள் மீட்பு

மன்னார் கீரி கடற்கரை பகுதியில் உள்ள மீன் வாடி அமைந்துள்ள பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில்,ஒரு தொகுதி பீடி சுற்றும் இலைகளை மன்னார் மது வரி திணைக்கள அதிகாரிகள் நேற்று மாலை மீட்டுள்ளனர்.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 மூடைகளைக் கொண்ட 140 கிலோ பீடி சுற்றும் இலைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடற்பகுதியூடாக படகு மூலம் கடத்தப்பட்ட பீடி சுற்றும் இலைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி எம்.என்.மடிய சேகர தலைமையில் சென்ற மது வரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் குறித்த பீடி சுற்றும் இலைகளை கொண்ட மூடைகளை மீட்டுள்ளனர்.

எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

கைப்பற்றப்பட்ட 140 கிலோ பீடி சுற்றும் இலைக பொதிகள் மன்னார் மது வரி திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரனைகளை மன்னார் மது வரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருவகின்றது.

கருத்து தெரிவிக்க