உள்நாட்டு செய்திகள்

‘ஜனாதிபதியின் உத்தரவு கிடைக்கவில்லை’ – சிறைச்சாலைகள் திணைக்களம்

மரண தண்டனையை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தமது திணைக்களத்துக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

” ஜனாதிபதியால் கையொப்பமிடப்பட்டுள்ள உத்தரவை ஜனாதிபதி செயலாளர், நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கவேண்டும்.

அதன்பின்னர் சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளரால், சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அறிவிக்கப்படும். எனினும், குறித்த அறிவித்தல் இன்னும் கிடைக்கவில்லை.” என உயர் அதிகாரியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஐந்து பெண்கள், ஆறு வெளிநாட்டவர்கள் உட்பட ஆயிரத்து 217 மரண தண்டனை கைதிகள் இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் 755 பேர் மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கருத்து தெரிவிக்க