உள்நாட்டு செய்திகள்

குமார வெல்கமவுக்கு எதிராக கோட்டாவின் சகாக்கள் அரசியல் போர் தொடுப்பு!

கோட்டாபய ராஜபக்சவை கடுமையாக விமர்சித்துவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு பதிலடி கொடுப்பதற்கு கூட்டு எதிரணி எம்.பிக்கள் தயாராகிவருகின்றனர்.

இதன்படி குமார வெல்கமவின் அரசியல் கோட்டையாகக் கருதப்படும் களுத்துறை மாவட்டத்தில் கோட்டாவுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமொன்று நடத்தப்படவுள்ளதுடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறுகோரி தீர்மானமும் நிறைவேற்றப்படவுள்ளது என தெரியவருகின்றது.

எனினும், கூட்டு எதிரணியிலுள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையை விரும்பவில்லை என்றும், கோட்டாவுக்கு சார்பானவர்களாலேயே இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாகவும் அறியமுடிகின்றது.

” சிங்கள, பௌத்த மக்கள் மத்தியில் வரவேற்புபெற்ற பிரதான ஊடகம் மற்றும் முக்கிய தனியார் நிறுவனங்கள் சில குமார வெல்கமவின் உறவினர்களுக்கு சொந்தமானவை.

எனவே, அவரை சீண்ட நினைப்பது ஏதேனும் ஒரு வகையில் கூட்டு எதிரணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.” என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

 

 

கருத்து தெரிவிக்க