உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு மீள்பரிசீலனை- பிரித்தானியா எச்சரிக்கை

இலங்கை மரணத் தண்டனையை மீண்டும் அமுல்படுத்துமானால் அந்த நாட்டுடன் பயங்கரவாத தடுப்பு உட்பட்ட சட்டரீதியான நடவடிக்கைகளில் ஒத்துழைக்கமுடியாது என்று பிரித்தானிய அறிவித்துள்ளது.

பிரித்தானிய வெளியுறவு அலுவலக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பாதுகாப்பு விடயங்களில் இலங்கையுடன் கொண்டிருக்கும் தொடர்புகளை தமது நாடு மீள்பரிசீலனை செய்யும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மரண தண்டனைக்கு எதிரான நாடு என்ற வகையில் இலங்கையின் முடிவுக்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாகவும் பிரித்தானிய வெளியுறவுப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க