வெளிநாட்டு செய்திகள்

பீகாரில் மின்சாரம் தாக்கியதில் 4 பேர் பலி :

லால்பூரின் மட்போ கிராமத்தில் இருந்து பேரூந்து ஒன்றில்  60 கும் மேற்பட்டோர் ஜமூய் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள கோயில் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த போது , யோகியா அஸ்தான்  என்ற இடத்தின் அருகே எதிரே வந்த ஆட்டோவிற்கு வழி விடுவதற்காக, வீதியோரமாக பஸ்ஸை செலுத்தியுள்ளனர். அதன்போது எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின் கம்பியில் பஸ் உரசியது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். 18 பேர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் காயமடைந்தவர்களை அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்துள்ளார். மேலும் 6 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது . கோயிலுக்கு வழிபட சென்றவர்கள் பலியான சம்பவத்தை அறிந்து , அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க