உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தெல்லிப்பளையில் போதை ஒழிப்பு பேரணி!

ஐனாதிபதியின் தேசிய போதை ஒழிப்புத் திட்டத்தின் கீழான போதை ஒழிப்பு வாரச் செயற்பாடுகளின் நான்காம் நாளான இன்று போதை ஒழிப்புத் தொடர்பான விழப்புணர்வுப் பேரணி யாழ்ப்பாணம் மல்லாகம் பிரதேசத்தில் நடைபெற்றது.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மல்லாகம் சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இப்பேரணி போதை ஒழிப்பு தொடர்பான பதாகைகளுடன் மல்லாகம் நீதிமன்ற வீதியுடாக தேவாலயம் சென்று நிறைவடைந்தது.

இப் பேரணியில், போதைபொருள்களுக்கு எதிரான கருத்துக்களைக்கொண்ட பதாகைகள் பொதுமக்கள் தாங்கியிருந்தனர்.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இப் பேரணியில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க