உள்நாட்டு செய்திகள்புதியவை

வைத்தியர் சியாப்தீன் தொடர்பிலான சாட்சியங்கள் நாளை சமர்ப்பிப்பு!

குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி தொடர்பிலான சாட்சியங்கள் நாளை வியாழக்கிழமை குருணாகல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

நான்காயிரம் பெண்களுக்கு கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டதாக வைத்தியர் மொஹமட் சாபி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அத்துடன், இது குறித்த விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்ததை அடுத்து  கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சியங்கள் நாளை வழங்கப்படவுள்ளன.

கருத்து தெரிவிக்க