உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

காஞ்சிபான இம்ரானை மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு!

திட்டமிடப்பட்ட குற்றச்செயல் மற்றும் போதை பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட காஞ்சிபான இம்ரானை மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளரூடாக இந்த அனுமதி கிடைத்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

கஞ்சிப்பானை இம்ரானை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு  வழங்கப்பட்ட 90 நாட்கள் கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா முன்னிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேகநபரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்த நீதவான், ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி சந்தேகநபரை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க