உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

போதைப்பொருளை வைத்திருந்த நபருக்கு விளக்கமறியல்

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த நபரை எதிர்வரும் ஜூலை மாதம் 7ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.ரிஸ்வான் உத்தரவிட்டார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் 440மில்லிகிராம் ஹெரொயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

காத்தான்;குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க