உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

மட்டு.பூநொச்சிமுனையில் கலங்கரை விளக்கு

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாராம்பரிய மீன்பிடி பிரதேசமான பூநொச்சிமுனை பிரதேச மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

பூநொச்சிமுனை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த ஆராயும் விசேட கூட்டம் பூநொச்சிமுனை கடற்கரையில் இடம்பெற்றது.

குறித்த கடற்கரை பிரதேசத்தில் மீனவர் இறங்குதுறை அமைக்க நடவடிக்கைகள் எடுப்பதுடன் கலங்கரை விளக்கமும் அமைக்க ஆலோசிக்கப்பட்டுவருகின்றன.

அத்துடன் மீனவர்களின் மீன்கள் வெளிமாவட்ட மீனவர்களால் களவாடப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அமீர்அலி தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட மீனவர் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க