உள்நாட்டு செய்திகள்புதியவை

நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்கு உதவுங்கள்: பொதுபலசேனா

நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை அனைத்து வழிகளிலும் முன்னெடுத்து வருதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

கிருலப்பனையில் அமைந்துள்ள அதன் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை மாறாக நிதியை மாத்திரம் திரட்டுகின்றனர் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  பொதுபலசேனாவின் செயற்பாடுகளில் நாட்டம் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 100 ரூபாயேனும் தமது வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

நிதியுதவி அளிக்க விரும்புபவர்கள் இலங்கை வங்கியின் திம்பிரிகஸ்யாய கிளையில் ‘பொதுபலசேனா ஜாலய” என்ற பெயரில் 73308824 என்ற நடைமுறைக்கணக்கு இலக்கத்திலும் 74948616 என்ற சேமிப்புக்கணக்கு இலக்கத்திலும் பணத்தை வைப்புச்செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க