உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்

4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை – கையொப்பமிட்டார் ஜனாதிபதி! 

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் உத்தரவில் தான் கையொப்பமிட்டுள்ளார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஊடகப்பிரதானிகளுடன் இன்று (26) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

அத்துடன், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு இரண்டு மாதங்களின் பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

கருத்து தெரிவிக்க