உள்நாட்டு செய்திகள்புதியவை

சீரற்ற காலநிலை இன்றும் தொடர்கிறது!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை மழை பெய்யக்கூடிய சாத்திம் இருப்பதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய காலநிலை குறித்து காலநிலை அவதான நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியமுள்ளது.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க