உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

19 ஐ ஒழித்தே தீரவேண்டும் -மைத்திரி உடும்புப்பிடி!

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் இல்லாதொழிக்கப்படவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (26) மீண்டும் வலியுறுத்தினார்.

” அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும், அவர் நாட்டை நேசிப்பவராக இருப்பின் கட்டாயம் இதை செய்யவேண்டும்.” என்றும் தெரிவித்தார்.

ஊடகப்பிரதானிகளுடன் இன்று (26) காலை நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்த முடிவை எடுக்கின்றதோ அதை ஏற்று தான் செயற்படுவார் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க