சினிமா

விக்ராந்திற்கு கைகொடுக்கும் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படங்களின் அறிவிப்பு அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் அஞ்சலி நடித்திருக்கும் சிந்துபாத் படம் கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் வரும் ஜீலை 28ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய படம் ஒன்றிற்கு விஜய் சேதுபதி திரைக்கதை, வசனம் எழுதுவதாகவும், இப்படத்தை விக்ராந்தின் உடன் பிறந்த அண்ணனான சஞ்சீவ் இயக்குகிறார் எனவும்,  அதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்க ஒத்துக் கொண்டுள்ளதாகவும், ஆனந்த ஜாய் என்பவர் தயாரிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிப்பில் மும்முரமாக இருக்கும் விஜய் சேதுபதி இப்படத்திற்கு திரைக்கதை,  வசனம் எழுதும் பொறுப்பை விக்ராந்திற்காகவே சம்மதித்துள்ளாராம். விக்ராந்துடன் நெருக்கமான நட்பை பேணி வந்த விஷால் விரைவில் விக்ராந்தை ஹீரோவாக வைத்து படமெடுப்பதாக அறிவித்திருந்தார். எனினும், அதன்படி அவர் செய்யவில்லை. இவ்வாறான சூழ்நிலையிலேயே விக்ராந்திற்கு விஜய் சேதுபதி கை கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க