பொன்மொழிகள்

வளமுடன் வாழ சில வாழ்க்கைத் தத்துவங்கள் !

  • ஒருவருடைய முகக் கறையை கண்ணாடி காட்டியதால், அவர் கண்ணாடி மீது கோபமோ எரிச்சலோ படுகிறாரா? இல்லையே… அது போல் நம்மிடம் உள்ள குறைகளை ஒருவர் சுட்டிக்காட்டினால் அவர் மீது கோபமோ எரிச்சலோ படமால், கூறிய அறிவுரைகளை கேட்டு திருத்திக் கொள்ள வேண்டும்.
  • இவ் உலகில் எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துக்கள் உள்ளன. ஒன்று காலம் இன்னொன்று மௌனம்.
  • ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை அதேவேளை முயற்சியில்லாத ஆசையில் பயனில்லை.
  • மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்கள் எல்லாம் வீணானவையல்ல.

கருத்து தெரிவிக்க