உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இன்று இரண்டு முக்கிய சாட்சிகள் முன்னிலையாகின்றனர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சாட்சியங்களை பதிவுசெய்து வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் இன்று முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சாட்சியமளிக்கவுள்ளார்.

இதற்கான அழைப்பை ஏற்கனவே தெரிவுக்குழு அவருக்கு அனுப்பியிருந்தது.

இந்தநிலையில் இராணுவத்தளபதி மகேஸ் சேனாநாயக்கவும் இன்று தெரிவுக்குழுவின் முன் சாட்சியமளிக்கவுள்ளார்.

தாக்குதல்களின் பின்னர் கைதுசெய்யப்பட்டவர் ஒருவர் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தம்மிடம் விசாரித்தார் என்று இராணுவத் தளபதி தெரிவித்திருந்தநிலையில் அது சர்ச்சைக்குரிய விடயமாக மாறியிருந்தது.

இந்தநிலையில் இன்று அது தொடர்பில் விளக்கங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க