வெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானில் அல் கொய்தா பயங்கரவாதிகள் சுட்டு கொலை :

பாகிஸ்தானின் சிந்து மாகாண தலைநகர் கராச்சியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, சிறப்பு அதிரடிப் படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அதன்போது வீடொன்றில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து , சரணடையும் படி எச்சரித்தும் செவி சாய்க்காத பயங்கரவாதிகள் , பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் அல் கொய்தா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பொலிசார் கைப்பற்றி உள்ளனர்.

கருத்து தெரிவிக்க