உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ரணில் – சந்திரிக்கா அவசர சந்திப்பு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்குமிடையில் விரைவில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரும் இதில் பங்கேற்பார்கள் எனவும் தெரியவருகின்றது.

டிசம்பர் 7 ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தல் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சு.க. உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க