உள்நாட்டு செய்திகள்புதியவை

ரவியின் மகள் குற்றப்புலனாய்வு பிரிவில் இருந்து வெளியேறினார்

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனெல்லா கருணாநாயக்க 6 மணி நேரத்துக்கும் மேலான விசாரணைகளின் பின்னர்  குற்றப்புலனாய்வு பிரிவில் இருந்து வெளியேறியுள்ளார்.

மத்திய வங்கி முறி விற்பனை தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் பொய்யான சாட்சியம் அளித்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அவரது மனைவியை குற்றப்புலனாய்வுத்துறையில் வாக்குமூலம் வழங்குமாறு முன்னதாக உத்தரவிடப்பட்டது.

கொழும்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் இன்று  ஒனெல்லா கருணாநாயக்கவிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க