உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

கடலில் மூழ்கி உயிரிழந்தவர்களின் இறுதி கிரியை இன்று

கிரிந்த கடற்பரப்பில் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த தந்தை மற்றும் புதல்வியர் இருவரின் இறுதி சடங்குகள் இன்று மாலை அட்டன் குடாகம பொது மயானத்தில் இடம்பெற்றன.

 ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் இழப்பு சோகத்தை ஏற்படுத்திய நிலையில்  அட்டன் பகுதி வெள்ளைக்கொடிகளால் நிரம்பி காணப்பட்டது.

ஹம்பாந்தோட்டை கிரிந்த – யால கடற்பரப்பில் நீராடச் சென்றபோது, நீரில் இழுத்துச் செல்லப்பட்டதில் தந்தையும்,  ஒரு பெண் பிள்ளையும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

இதேநேரம், பாதிக்கப்பட்ட ,தாயும், மற்றுமொரு மகளும் மீட்கப்பட்ட நிலையில் தெபரவெவ வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றனர்.

இந்த நிலையில், சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு மகளும் நேற்று மாலை உயிரிழந்தார்.

தாய்  மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்கள் அட்டனை சேர்ந்த நுவான் இந்திக்க விஜேயசூரிய ( தந்தை 39) மகள்களான 6 வயது நேசத்மா சாகதி, 4வயது  நதிஷா ஈனோமி என தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க