உள்நாட்டு செய்திகள்புதியவை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை மழை பெய்யக்கூடிய சாத்திம் இருப்பதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய காலநிலை குறித்து காலநிலை அவதான நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பதுளை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழைபெய்யக்கூடும் எனவும் அந்த நிலையம் மேலும் அறிவித்தல் விடுத்துள்ளது.

கருத்து தெரிவிக்க