உள்நாட்டு செய்திகள்புதியவை

5.3 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ .5.3 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க திணைக்கள அதிகாரி ஜெனரல் சுனில் ஜெயரத்ன தெரிவித்தார்.

துபாயில் இருந்து நான்கு இலங்கையர்கள் சிகரெட்டுகளை நாட்டிற்கு கடத்த முயன்ற
நிலையில் இன்று காலை இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

தற்போது சந்தேகநபர்கள் நால்வரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று ஜெயரத்ன குறிப்பிட்டார்.

குறித்த நால்வரும் சிலாபம் மற்றும் வென்னப்புவவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் மொத்தம் 483 சிகரெட் அட்டைப்பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க