உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பூஜித் ஜயசுந்தர தாக்கல் செய்த மனுவை ஆராய உச்ச நீதிமன்றம் தீர்மானம்!

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை ஆராய உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பூஜித் ஜயசுந்தர, தனக்கு வழங்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறையை இரத்து செய்து, தன்னை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

கருத்து தெரிவிக்க