உள்நாட்டு செய்திகள்புதியவை

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய போட்டியிடுவதில் சந்தேகம்!

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி வேட்பளராக போட்டியிடுவதில் சந்தேகம் என ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் பி. ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யாராக இருந்தாலும் அது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அவர் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ அல்லது வேறு எவருமா? என்பது அந்தக் கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினை அது எமது கட்சியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை எனவும் பி.ஹரிசன் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க