உள்நாட்டு செய்திகள்புதியவை

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நீதிமன்றில் முன்னிலை!

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

தனக்கு வழங்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறையை இரத்து செய்து, தன்னை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு மீதான விசாரணைகள் இன்று திங்கட்கிழமை இடம்பெறுகின்ற நிலையில், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார்.

கருத்து தெரிவிக்க