உள்நாட்டு செய்திகள்புதியவை

கோட்டாவுக்காக பாரிய பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும்: பஷில்

கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவால் பாரிய பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும் என அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளரக அறிவிக்கப்பட்டால் கட்சியின் நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபடுவீர்களா? என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளரக கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்குவதில் எந்த சிக்கலும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்காக செயற்பட்டதை விடவும் அதிகமாக செயற்பட வேண்டியுள்ளதாகவும் பஷில் ராஜபக்‌ஷ மேலும் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க