வெளிநாட்டு செய்திகள்

பிரான்சில் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து

பிரான்சின் தலைநகரான பாரிஸின் மத்திய பகுதியில் 6 மாடிகளைக் கொண்ட வீடொன்றில் சனிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வேகமாக பரவிய தீ  கண் இமைக்கும் நேரத்தில் அடுத்த தளங்களுக்கும் பரவி , அருகில் உள்ள 2 கட்டிடங்களிலும் பரவியது. இது தொடர்பாக அருகில் உள்ளோர் அளித்த தகவலின் படி, 200 கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் 4 மணித்தியாலங்கள் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 3 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். 20 கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க