புதியவைவெளிநாட்டு செய்திகள்

ராஜஸ்தானில் பந்தல் சரிந்ததில் 14 பேர் உயிரிழப்பு -பிரதமர் இரங்கல்

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் ஆன்மிக நிகழ்ச்சியின் போது பந்தல் சரிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பார்மர் பகுதியில் நடந்த புழுதிப்புயல் காரணமாக, பந்தல் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கன்றன.

இந்நிலையில், உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க