வணிக செய்திகள்

இமைபோல் காக்கும் ‘இடிதாங்கி’!

மின்னல் என்பது மழை மேகத்தில் நொடிப்பொழுதில் உண்டாகும் கிளைத்ததீப்பொறி போன்ற மின்பொறிக் கீற்றாகும். இது நிகழும்போது அதிக வெப்பமும்ஒளியும் உண்டாகும். இடி என்பது மின்னலின்போது உண்டாகும் மிகப்பெரியஒலியாகும்.

மழைக்காலங்களில் மின்னல் பாய்ந்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது. எனினும், இடிமின்னல் அபாயத்திலிருந்து தப்புவதற்கும் தற்போது கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலும் தனிநபர் ஒருவர் இடிதாங்கி கருவியை கண்டுபிடித்துள்ளார். பாரிய கட்டடங்களுக்கு மட்டுமின்றி வீடுகளுக்கும் பொறுத்தும் வகையிலேயே இடிதாங்கி கருவி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இடிதாங்கிகளை அமைத்தால் அதிலிருந்து மின்சாரத்தை கடத்தும் கம்பியை, தரையில் அதிக ஆழத்துக்கு ( சுமார் 8 அடிவரை) பல்வேறு பிரிவுகளாக பிரித்து இரும்பு வலைமாதிரி புதைக்கப்படும்.

இதன்மூலம் மின்னலின்போது பாயும் மின்சாரத்தை இடிதாங்கிகள் எளிதில் நிலத்துக்கு கடத்திவிடும் என்கிறார் நவீன வடிவில் இடிதாங்கியை நிர்மாணித்துள்ள கண்டுபிடிப்பாளர் மஹிந்த ஹெட்டியாராச்சி.

இது தொடர்பில் அவர் கூறியதாவது,

“உலகில் இதற்கு முன்னரும் இடிதாங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், மின்சாரக் கட்டமைப்பின் ஊடாக பாயும் மின்னல் தாக்கத்துக்கு தீர்வு இல்லை.அவ்வாறு நடந்தால் மரணம் நிச்சயம் என்ற நிலைதான் இருந்தது .இதனைக்கருதி சுமார் 32 வருடகால ஆய்வின் பின்னரே என்னால் இக்கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு  ‘Lightning earthing’ என பெயர் சூட்டினேன்.

கண்டுபிடிப்பு தொடர்பில் ஊடங்கள் வாயிலாக தெரியப்படுத்தினேன். கண்டுபிடிப்புக்கான உரித்தையும் பெற்றேன். ஆரம்பத்தில் உரிய வகையில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. பேராதனை பல்கலைக்கழகத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. சான்றிதழும் கிடைத்தது.

அதன்பின்னர் சந்தைப்படுத்தல் நடவடிக்கை ஆரம்பமானது. ஆயுட்காலம் முழுதும் உத்தரவாதம் வழங்கமுடியும் என கூறப்பட்டாலும் 10 வருடகால உத்தரவாத அடிப்படையிலேயே சந்தைக்கு விநியோகித்தேன்.

இந்நிலையில் கண்டுபிடிப்பை ஆர்தர் சி. கிளார்க் மையத்துக்கு சமர்ப்பித்தேன். ஆய்வு அறிக்கையையும் பெற்றோர். இலங்கையிலுள்ள கண்டுபிடிப்பாளர்கள் தொடர்பான ஆணைக்குழு எனக்கு உதவியது. ஜெனிவாவுக்கு அழைத்துச்சென்றனர். மூன்றாம் இடம் கிடைத்தது. நாடு திரும்பிய எனக்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

இவற்றையெல்லாம் சந்தைப்படுத்தலுக்காக பயன்படுத்தினேன். அத்துடன் நின்றுவிடாமல் நவீன யுகத்துக்கேற்ப மாற்றங்களை செய்தேன்.

இக்கருவியானது எமது குழுவினால் மட்டுமே பொறுத்தப்படும். வேறு எவருக்கும் பொறுத்துவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். ஏனெனில் சிறிய பிரச்சினை ஏற்பட்டால்கூட நன்மதிப்பு முழுமையாக இல்லாமல்போய்விடும். எமது விற்பனை முகவர்கள் ஊடாக மட்டுமே பொறுத்தல் நடவடிக்கை இடம்பெறும்.

தேவைப்படுபவர்கள் தொலைபேசியூடாக தொடர்பு கொள்ளலாம் (மஹிந்த ஹெட்டியாராச்சி-075 7855866 )

பாரிய நிறுவனங்கள்கூட எம்மை நாடியுள்ளன. சுற்றுலா விடுதிகள், மின்சார நிலையங்கள் ஆகியவற்றில்கூட பொருத்தியுள்ளோம். ‘த்ரீ பேஸ்’ மின்சார இணைப்பாக இருந்தால்கூட அதற்கேற்ற வகையில் எமது கண்டுபிடிப்பை பயன்படுத்தலாம்.

அதேவேளை, வீடுகளுக்கு பொறுத்துவதன்மூலம் இடி, மின்னல் ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். மின்சார உபகரணங்களையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.

குறித்த கருவி  ( வீடுகளுக்கானது) 19 ஆயிரத்து 900 ரூபாவுக்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. அதை உரியவகையில் பொறுத்துவதற்கு 7 ஆயிரத்து 500 ரூபா அறவிடப்படும். ‘எம்பியர்’ வீதத்துக்கேற்ப விலையும் மாறும். தயாரிப்பு நிலையம் கண்டிலேயே இருக்கின்றது. நாட்டு மக்களுக்கான ஒரு சேவையாகவே இக்கண்டுபிடிப்பை நான் பார்க்கின்றேன்.

கருத்து தெரிவிக்க