கிழக்கு செய்திகள்

யோகா தினத்தை முன்னிட்டு ‘யோக வாழ்வு’ சஞ்சிகை வெளியீடு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ந.முரளீதரன், மற்றும் க.இறைவன் ஆகியோரின் யோக வாழ்வு சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வு மட்டக்களப்பு கதிரவன் கலைக்கழக ஏற்பாட்டில் மட்டக்களப்பு தாழங்குமா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கதிரவன் கலைக்கழகத்தின் தலைவர் த.இன்பராசாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக மட்டக்களப்பு வலய வலயக் கல்விப் பணிப்பாளர் வே.மயில்வாகனம் கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி கி.ரமேஸ் மற்றும் மண்முனைப்பற்றுக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் க.நல்லதம்பி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

கௌரவ விருந்தினர்களாக மட்.தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலய அதிபர் சா.மதிசுதன், மற்றும் மண்முனைப்பற்று கலாசார உத்தியோகத்தர் திருமதி வளர்மதி.ராஜ், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது முதற் பிரதியினை மட்டக்களப்பு தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர், தவராசா  பெற்றுக்கொண்டார்.

நூல் நயவுரையை மட்டக்களப்பு சக்தி ஆனந்த யோகா வித்தியாசாலையின் இயக்குனர் மட்டுநகர் சிவவரதகரன் நிகழ்த்தினார்.

கருத்து தெரிவிக்க