உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கூட்டமைப்போடு இருப்பது குறித்து மறுபரிசீலனை: கோடீஸ்வரன்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் விரைவில் தரமுயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் நடத்தும் போராட்ட இடத்துக்கு அமைச்சர் மனோ கணேசன் மற்றும் தயா கமகே ஆகியோர்  தற்போது சென்றுள்ள நிலையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக் களத்துக்கு நேரடியாக சென்றிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மக்கள் முன் உரையாற்றினார்.

இதன்போது, குறித்த பிரச்சினை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் கூட்டமைப்போடு இருப்பது குறித்து மறுபரிசீலனை செய்வோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க