உள்நாட்டு செய்திகள்புதியவை

அலோசியஸ் வெளிநாடு செல்வதற்கான அனுமதி இரத்து

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸின் தந்தையான ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ், வெளிநாடு செல்வதற்கான பயண அனுமதியை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

ஜெஃப்ரி ஜோசப் ஆலோசியஸிற்கு வௌிநாடு செல்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்யுமாறு சட்ட மா அதிபரால் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் நேற்று நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த பாத்திரம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மகளின் திருமண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை சிங்கப்பூர் செல்ல ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸுக்கு நீதிமன்றம் முன்னதாக அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க