உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மஸ்கெலிய – கவரவில தோட்டத்தில் குளவி கொட்டு-பதின்மூன்று பேர் பாதிப்பு

மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சாமிமலை கவரவில தோட்டத்தில் பதின்மூன்று தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் .

இன்று காலை கொழுந்து பறித்து கொண்டிருந்த வேலையில் இவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மஸ்கெலிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லபட்டு சிலர் சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும் அறுவர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்து தெரிவிக்க