உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கியது நாவலப்பிட்டி நகரம் 

நேற்று அதிகாலையிலிருந்து தொடர்ச்சியாக பெய்த கடும் மழையால் நாவலப்பிட்டி நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனால் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன் வேலைத்தளங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு செல்வோர் பாரிய அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாவலப்பிட்டி பஸ் தரிப்பிடத்திலிருந்து தலவாக்கலை செல்லும் வீதி மற்றும் கண்டி பிரதான வீதி என்பன முற்றாக வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பாதையோரங்களில் காணப்படுகின்ற கடைகளிலும் நீர் புகுந்தள்ளதால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது என மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க