உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ரயில்வே பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு சில மணித்தியாலங்களில் ஆரம்பிக்கப்படுமா?

ரயில்வே பணியாளர்கள் தமது பணிப்புறக்கணிப்புக்காக விதித்திருந்த காலக்கெடுவுக்கு இன்னும் சில மணித்தியாலங்களே உள்ளன.

இன்று பிற்பகல் 2 மணிவரை அவர்கள் தமது பணிப்புறக்கணிப்பை ஒத்திவைத்துள்ளனர்.

அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இடம்பெறவுள்ள சந்திப்பு வரையிலுமே இந்த பணிப்புறக்கணிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே கூட்;டு தொழிற்சங்கம் நேற்று இரவு முதல் இந்த பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது.

எனினும் அமைச்சர் மங்கள சமரவீரவின் கோரிக்கையை அடுத்து இன்று பிற்பகல் 2 மணிவரை அது ஒத்திவைக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க